Posts

Showing posts from March, 2023

இன்றைய சமூக சூழல்...???

Image
தற்போது 50+ வயதுடைய சமூகத்துடன்..சித்தி ...சித்தப்பா....பெரியம்மா. .பெரியப்பா..என்னும் உறவு முறைகள். .விடை பெற்று விடும்..ஒரு மகள்..ஒரு மகன்...என்று..குடும்ப சூழல். .ஆமை ஓட்டுக்குள் இழூக்கப்படும்  அவலம் போல..சமுதாய நாகரிகத்தின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு ..பல குடும்பங்கள் பின்னுக்கு தள்ளப் படும்..இரத்த சம்பந்தங்களும்..சராசரி மனித உறவுகள் போலவே முக்கியத்துவம் பெறும்..நட்புகளுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்படும்..பிறருக்கு  பணத்தை செலவு செய்திட  மனம் யோசிக்கும்.(இனியும் தொடரும்)

படித்ததில் பிடித்தது 🌹(14-3-22)

Image
*அடி உதவுவது போல..அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.!!* பக்கத்து வீட்டினர் ஏதோ ஒரு விஷயமாக பேசும்போது அதான் நான் சொன்னேனே அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று நீ தான் கேட்கவில்லை என கூற என் இளைய மகன் அவன் அம்மாவிடம் பார்த்தியா அடி தான் உதவுகிறது கெஞ்சினால் எதுவும் நடக்காது என்றான் அவனை பார்த்து சிறித்தவாறே உன்னைப்போல் பலரும் தப்பாகவே அந்த பதத்தை பிரயோகிக்கிறார்கள் அதன் அர்தமே வேறு என்றேன் அப்படியா அண்ணன் தம்பிக்கு அடி உதவாதா பின்னர் எதுதான் உதவும் அன்பா அஹிமசையா? என கேட்டான்  அவனிடம் அதன் அர்தம் சொல்லுகிறேன் கேள் பின்னர் உனக்கு நான் சொல்வது புரியும் என அவனுக்கு கூறிய விளக்கம் உங்களுக்காக மகனே இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இணைத்தான்.  அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான் அதே போல...